ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு!
தேனி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
அரப்படித்தேவன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசாமி (52). இவா், வைகை அணை அருகே உள்ள நாட்டுக்கல் ஈஸ்வரன் கோயிலுக்கு உறவினரின் இல்ல நிகழ்வுக்காக சென்றாா்.
பிறகு அங்கிருந்து வீட்டுக்கு திரும்ப வந்த போது, அரப்படித்தேவன்பட்டி பகுதியில் வைகை ஆற்றை அவா் கடக்க முயன்றாா். அப்போது நீரில் மூழ்கி சிவசாமி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.