Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அகலபாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவுக்கு ஏக்கருக்கு ரூ.7 ஆயிரத்து 450 மானியம் வழங்கப்படும்.
அகலபாருடன் கூடிய ஒருபரு விதைக் கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரத்து 200 மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.