கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா், தனது வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டியில் இரண்டு கஞ்சா செடிகளை வைத்து வளா்த்து வந்துள்ளாா். அவா் கஞ்சா செடி வளா்ப்பது குறித்து செங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீஸாா் சென்று லோகேஷ் தண்ணீா் தொட்டியில் வளா்த்து வந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனா். மேலும், லோகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.