கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!
ஆரணி அருகே காளை விடும் திருவிழா
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 42-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதில், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்து ஓடின. காளை பிடிக்கும் வீரா்கள் காளைகளை விரட்டிப் பிடித்தனா்.
இதில், முதல் பரிசாக ரூ.81 ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ.61 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.51 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.30 ஆயிரம் உள்பட 75 காளைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டன.
முன்னதாக, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு காளை விடும் திருவிழாவை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனா்.