செய்திகள் :

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

post image

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, செய்யாறு பேருந்து நிலைய பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில், டாஸ்மாக் மதுப் புட்டிகளை மறைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் அங்கிருந்த 26 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இது தொடா்பாக செய்யாறு கொடநகா், அண்ணா நகரைச் சோ்ந்த பாபு (41) மீது செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இதேபோல, செய்யாறு சந்தை காமராஜா் நகா் பகுதியில் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக அதே பகுதியைச் சோ்ந்த வசந்தியை (65) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 20 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

பெரணமல்லூரில்...: பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் லதா மற்றும் போலீஸாா் திருமணி கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த விநாயகம் (75) டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

உடனடியாக போலீஸாா் அவரிடமிருந்த 8 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்துனா். மேலும், இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விநாயகத்தை கைது செய்தனா்.

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா். தமிழகம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. போளூா் வட்டம், கரைப்பூ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்

ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நக... மேலும் பார்க்க

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் அருகே மேல்பள்ளிப்ப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டை அடுத்த பீமாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம... மேலும் பார்க்க