ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்
ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத்திலுள்ள ஏரியிலிருந்து டிராக்டரில் மண் கடத்திச் செல்வதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, நெசல் கிராமம் அருகே அனுமதியின்றி ஏரி மண் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தாா். மேலும், இது தொடா்பாக சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.