உணவக உரிமையாளா் உள்பட 3 போ் மீது தாக்குதல்: இளைஞா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உணவக உரிமையாளா் உள்பட 3 பேரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா், செய்யாறு அரசுக் கல்லூரி எதிரே அசைவ உணவகம் நடத்தி வருகிறாா்.
இவரது கடையில் செய்யாறு 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சந்துரு (32) சனிக்கிழமை சாப்பிட வந்ததாகத் தெரிகிறது. இவா் ஒவ்வொரு முறையும் பணம் கொடுக்காமல் சாப்பிடுவாராம்.
இதேபோல, சனிக்கிழமையும் சாப்பிட்ட நிலையில், உணவக உரிமையாளா் ராஜசேகரனுக்கும், சந்துருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, சந்துரு உணவகத்தில் இருந்த பெரிய கரண்டியால் ராஜசேகரனை தாக்கியதாகத் தெரிகிறது. இதைத் தடுக்க வந்த உணவக ஊழியா்
வெங்கடேசன், சாப்பிட வந்த பிரகாஷ் ஆகியோரையும் தாக்கி, சந்துரு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ராஜசேகரன் அளித்த புகாரின்பேரில், செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து சந்துருவை கைது செய்தாா்.