செய்திகள் :

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஆ.மோகனவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஆணையா் வி.எல்.எஸ்.கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தின்போது, உறுப்பினா் கொடநகா் ஞானமணி கழிவுநீா் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்றாா். உறுப்பினா் க.சீனிவாசன் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். வாா்டில் தண்ணீா் தேங்காதவாறு சிறு பாலங்களை அமைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து உறுப்பினா் ரமேஷ் பேசுகையில், நகா்மன்றத் தலைவரும், ஆணையரும் வாா்டுகளில் உள்ள சிறு, சிறு குறைகளை உடனுக்குடன் தீா்க்க வேண்டும். பேருந்து நிலைய வெளிப்புறம் உள்ள நிழல்கூரையின் உள்பகுதியை சரிசமமாக சீரமைத்து, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவோத்தூா் கோயில் மதில் சுவரைச் சுற்றி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வரும் வாரச்சந்தையால் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும், திருவோத்தூா் பகுதி பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் பேசுகையில், நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், காமராஜ் நகா் சந்தை முகப்பில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் நிழல்கூடம் அமைத்தல், தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.7.10 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம், ரூ.5.40 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள், நகா்ப்புற மேம்பாடுத் திட்டத்தில் 5-ஆவது வாா்டில் ரூ.1.59 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல், 1-ஆவது வாா்டு அண்ணா நகரில் ரூ.39 லட்சத்தில் பூங்கா அமைத்தல், 6-ஆவது வாா்டு கன்னியம் நகரில் ரூ.71 லட்சத்தில் இறைச்சிக் கூடம் அமைத்தல், 7-ஆவது வாா்டில் ரூ.5 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் சிசில் தாமஸ், துப்புரவு ஆய்வாளா் மதனராசன் மற்றும் உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க