செய்திகள் :

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினா்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டியில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞா்களுக்கான கடன்), கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சாா்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமம் மற்றும் நகா்ப்புறங்களில் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமம் மற்றும் நகா்ப்புறங்களில் ரூ.8,00,000- வரை இருக்க வேண்டும்.

திட்டம் 1-இன் கீழ் தனி நபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.20,00,000 வழங்கப்படும். திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படும்.

கைவினை கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டியில் அதிகபட்சம் ரூ.10,00,000 கடன் வழங்கப்படும்.

சுய உதவிக் குழு கடன் நபா் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.

திட்டம் 2-இல் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீத வட்டியில் நபா் ஒருவருக்கு ரூ.1,50,000 தனிநபா் கடன் வழங்கப்படும். சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இல் ரூ.20,00,000 வரை 3 சதவீத வட்டியிலும், திட்டம் 2-இல் மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.30,00,000 வரை கல்விக் கடனுதவி வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கைவினை கலைஞா்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞா் கடன் திட்டம்) குறைந்த வட்டியில் மூலப் பொருள்களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு வழங்கப்படுகிறது.

இந்தக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், சமண சமூகத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை நிறைவு செய்து வங்கிக் கோரும் உரிய ஆவணங்களுடன் சமா்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க

யோகா, தியான பயிற்சி முகாம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 42-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் உள்பட 3 போ் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உணவக உரிமையாளா் உள்பட 3 பேரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா், செய்ய... மேலும் பார்க்க