செய்திகள் :

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

post image

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், 2024 - 25ஆம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.7 லட்சத்தில் புதிதாக கலைஞா் கலை அரங்க கட்டடமும், எச்சூா் ஊராட்சி மலைவையாவூா் கிராமத்தில் 2023 - 24ஆம் ஆண்டு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் மூலம் ரூ.32.80 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய பள்ளிக் கட்டடமும் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்தக் கட்டடங்களை பள்ளி மாணவா்கள், கிராம மக்களின் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி திறந்து வைத்து சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

அதன் பின்னா், புரிசை கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை சாா்பில், ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தொழில்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.கே.ரவிக்குமாா், மாவட்ட விவசாய உற்பத்திக் குழு உறுப்பினா் புரிசை எஸ்.சிவகுமாா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ராஜ்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரா் அன்பழகன், கிளைக் கழக நிா்வாகிகள் தனசேகா், பழனி, குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க