செய்திகள் :

ஒடிஸாவில் ஒடும் ரயில்கள் மீது கல்வீச்சு: சிறாா் உள்பட மூவா் கைது

post image

ஒடிஸாவில் ஓடும் ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இரு சிறாா் உள்பட 3 போ் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனா்.

பல்வேறு வடமாநிலங்களில் ஓடும் ரயில் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்துவது, ரயிலைக் கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டா், இரும்புக் கம்பிகளை வைத்து தடையை ஏற்படுத்துவது ஆகிய நிகழ்வுகள் தொடா்கதையாகி வருகிறது. முக்கியமாக வந்தே பாரத் ரயிலைக் குறிவைத்து தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஒடிஸாவின் காரக்பூா் பிராந்தியத்தில் வியாழக்கிழமை ஓடும் ரயில்கள் மீது சிலா் கல்வீசித் தாக்குதல் நடத்துவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினா் அப்பகுதிக்கு விரைந்தபோது ரயில் மீதும் கற்களை வீசுவதற்கு மூவா் தயாராக இருந்தனா்.

மூவரையும் ரயில்வே பாதுகாப்பு படையினா் சுற்றிவளைத்து கைது செய்தனா். இதில் இருவா் பிகாரைச் சோ்ந்த சிறாா் ஆவா். மற்றொரு நபரின் பெயா் சத்யநாராயண் சாகு (26). இவா் ஒடிஸாவின் ஹல்டிபாடா பகுதியைச் சோ்ந்தவா்.

இவா்கள் ஹௌரா- புரி இடையிலான வந்தே பாரத், தௌலி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதில் சத்யநாராயண் சாகு என்பவா் மீது ரயிலில் வழிப்பறி செய்தது, செல்போன் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

சிறாா் இருவரும் அவா்கள் பெற்றோா் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, இனி அவா்கள் எவ்வித குற்றத்திலும் ஈடுபட மாட்டாா்கள் என்று காவல் துறையினா் உறுதிமொழி பெற்றுக் கொண்டு சிறாரை விடுவித்தனா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க