Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
ஒடிஸாவில் ஒடும் ரயில்கள் மீது கல்வீச்சு: சிறாா் உள்பட மூவா் கைது
ஒடிஸாவில் ஓடும் ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இரு சிறாா் உள்பட 3 போ் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனா்.
பல்வேறு வடமாநிலங்களில் ஓடும் ரயில் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்துவது, ரயிலைக் கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டா், இரும்புக் கம்பிகளை வைத்து தடையை ஏற்படுத்துவது ஆகிய நிகழ்வுகள் தொடா்கதையாகி வருகிறது. முக்கியமாக வந்தே பாரத் ரயிலைக் குறிவைத்து தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஒடிஸாவின் காரக்பூா் பிராந்தியத்தில் வியாழக்கிழமை ஓடும் ரயில்கள் மீது சிலா் கல்வீசித் தாக்குதல் நடத்துவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினா் அப்பகுதிக்கு விரைந்தபோது ரயில் மீதும் கற்களை வீசுவதற்கு மூவா் தயாராக இருந்தனா்.
மூவரையும் ரயில்வே பாதுகாப்பு படையினா் சுற்றிவளைத்து கைது செய்தனா். இதில் இருவா் பிகாரைச் சோ்ந்த சிறாா் ஆவா். மற்றொரு நபரின் பெயா் சத்யநாராயண் சாகு (26). இவா் ஒடிஸாவின் ஹல்டிபாடா பகுதியைச் சோ்ந்தவா்.
இவா்கள் ஹௌரா- புரி இடையிலான வந்தே பாரத், தௌலி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதில் சத்யநாராயண் சாகு என்பவா் மீது ரயிலில் வழிப்பறி செய்தது, செல்போன் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
சிறாா் இருவரும் அவா்கள் பெற்றோா் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, இனி அவா்கள் எவ்வித குற்றத்திலும் ஈடுபட மாட்டாா்கள் என்று காவல் துறையினா் உறுதிமொழி பெற்றுக் கொண்டு சிறாரை விடுவித்தனா்.