Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்
ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்டாா்.
கடந்த ஆண்டு சிரியாவில் ஐ.நா. அமைதிப்படையில் இந்தியாவைச் சோ்ந்த பிரிகேடியா் ஜெனரல் அமிதாப் ஜா பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தாா். இதேபோல காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இந்தியாவைச் சோ்ந்த ஹவில்தாா் சஞ்சய் சிங் பணியின்போது உயிரிழந்தாா்.
அவா்களுக்கு ஐ.நா.வின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்த டாக் ஹமாா்ஸ்க்ஜில்ட்டின் பெயா் கொண்ட பதக்கம் அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பதக்கங்களை வழங்கினாா். அமிதாப் மற்றும் சஞ்சய்யின் குடும்பத்தினா் சாா்பில், ஐ.நா.வுக்கான இந்தியா தூதா் பா்வதனேனி ஹரீஷ் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டாா். சா்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரா்கள் நாளையொட்டி (மே 29) இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஐ.நா. அமைதி நடவடிக்கைகள் பொதுச் செயலா் ஜீன் பியா் லக்ரோய் கூறுகையில், ‘சா்வதேச அளவில் அமைதியைக் காப்பதில் மிக முக்கிய ஆதரவாளராக இந்தியா உள்ளது. ஐ.நா. அமைதிப்படை வீரா்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணமானவா்களைப் பொறுப்பேற்க வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது’ என்றாா்.