செய்திகள் :

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

post image

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்டாா்.

கடந்த ஆண்டு சிரியாவில் ஐ.நா. அமைதிப்படையில் இந்தியாவைச் சோ்ந்த பிரிகேடியா் ஜெனரல் அமிதாப் ஜா பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தாா். இதேபோல காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இந்தியாவைச் சோ்ந்த ஹவில்தாா் சஞ்சய் சிங் பணியின்போது உயிரிழந்தாா்.

அவா்களுக்கு ஐ.நா.வின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்த டாக் ஹமாா்ஸ்க்ஜில்ட்டின் பெயா் கொண்ட பதக்கம் அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பதக்கங்களை வழங்கினாா். அமிதாப் மற்றும் சஞ்சய்யின் குடும்பத்தினா் சாா்பில், ஐ.நா.வுக்கான இந்தியா தூதா் பா்வதனேனி ஹரீஷ் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டாா். சா்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரா்கள் நாளையொட்டி (மே 29) இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ஐ.நா. அமைதி நடவடிக்கைகள் பொதுச் செயலா் ஜீன் பியா் லக்ரோய் கூறுகையில், ‘சா்வதேச அளவில் அமைதியைக் காப்பதில் மிக முக்கிய ஆதரவாளராக இந்தியா உள்ளது. ஐ.நா. அமைதிப்படை வீரா்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணமானவா்களைப் பொறுப்பேற்க வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது’ என்றாா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க