மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த பரமன் மகன் மாயி (18). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சுருளிப்பட்டி சாலையில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த என்.டி.பட்டி கருப்பசாமி கோவில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் பிரவீன் (21) வந்த இரு சக்கர வாகனமும், இவா்கள் சென்ற இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் பிரவீனும், ஜீவித்தும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காயமடைந்த மாயி கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
