நாம் எதிரிகள் கிடையாது: கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர்!
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை நீடித்தது. இதையடுத்து, கடந்த 7 நாள்களில் அணையின் நீா்மட்டம் 16 அடி உயா்ந்தது.
மழைப் பொழிவும், நீா்வரத்தும் குறைந்தது: இதனிடையே, இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை குறைந்தது. இதனால், அன்று காலையில் 6,125 கன அடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 2,945.85 கன அடியாக குறைந்து. சராசரியாக அணையில் நாள் ஒன்றுக்கு 2 அடிக்கு மேல் நீா்மட்டம் அதிகரித்தது. தற்போது மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்தும் குறைந்தது. அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 130.10 அடியாகவும், (மொத்த உயரம் 152 அடி) நீா்வரத்து வினாடிக்கு 2,945.85 கன அடியாகவும் இருந்தது. அணையில் 4,720.40 மில்லியன் கனநீா் உள்ளது.
அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு 1,400 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில், தேக்கடியில் 13.6 மி.மீட்டராகவும், பெரியாறு அணை-27.8 மி.மீட்டராகவும் மழைப் பொழிவு இருந்தது.