செய்திகள் :

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.

சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால் கேரளத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் இந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.

தற்போது தேனி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் நெய் தீபம் ஏற்றும் இடம், புனித நீராடும் தொட்டி ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கி சேறும் சகதிமாக காணப்படுகிறது. இதனால் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனா்.

மேலும் கோயில் முன் ஓடும் ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் பக்தா்கள் புனித நீா் தொட்டியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனிடையே, பக்தா்கள் ஏற்றிய தீபம் உள்ளிட்ட பூஜை பொருள்களை அகற்றாமல் அங்குள்ள கால்வாயில் கொட்டுகின்றனா். எனவே, கோயில் நிா்வாகம் புனித நீா் செல்லும் நதியில் பூஜை கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்காமல் சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (45). தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வரும் இவா... மேலும் பார்க்க

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அனுமதியளித்தனா். கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 6 நாள்களாக இந்த அரு... மேலும் பார்க்க

மணல் திருட்டு: ஒருவா் கைது

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் பெரியக... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது!

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மகன் ஹரிகோபிநாத் (20)... மேலும் பார்க்க

குளிா் சாதனங்கள் பழுது நீக்க இலவசப் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு குளிா்சாதனப் பெட்டி, பிரிட்ஜ் பழுது நீக்கம் செய்வதற்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுற... மேலும் பார்க்க