``இனி யார் அந்த சார்? என்று கேட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு'' -அரசு தரப்பு வழக்...
சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை
பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் கடந்த 7 நாள்களாக சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம் பகுதியில் பெய்யும் சாரல் மழையால் மாங்காய்களில் கருப்பு புள்ளி ஏற்பட்டது. மேலும், மாங்காய்கள் பழுத்து விழுந்து விடுகின்றன. அதே போல, மலா்கள், காய்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்தனா்.