மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை
வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வேட்டையாடிய மேலக்கூடலூரைச் சோ்ந்த ராஜபிரவுவை வனத் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கூடலூரைச் சோ்ந்த செல்வம் மகன் ராகவனை (27) கம்பம் மேற்கு வனச்சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா் கைது செய்தனா்.