தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் அமலாக்கத் துறை இணை இயக்குநா் கைது: சிபிஐ நடவடிக்கை
ஒடிஸாவில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை இணை இயக்குநரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இது தொடா்பாக சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை கூறப்பட்டதாவது:
ஒடிஸாவைச் சோ்ந்த தொழிலதிபா் ரதிகாந்த் ரெளத். இவா் கல்குவாரி நடத்தி வருகிறாா். அமலாக்கத் துறை வழக்கில் சிக்கியுள்ள இவா் ரூ.5 கோடி அளித்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக அமலாக்கத் துறை இணை இயக்குநா் சிந்தன் ரகுவன்ஷி பேரம் பேசியுள்ளாா். ஆனால், அவ்வளவு பெரிய தொகையை அளிக்கும் அளவுக்கு இப்போது தன்னிடம் பணம் இல்லை என்று ரகுவன்ஷியிடம் ரதிகாந்த் ரௌத் கூறியுள்ளாா். இறுதியாக ரூ.2 கோடி அளித்தால் சொத்துகள் முடக்கப்படுவதில் இருந்து காப்பாற்றுவதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாகவும் ரகுவன்ஷி பேரம் பேசியுள்ளாா். ஒடிஸாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ரதிகாந்த் ரெளத் விசாரணைக்கு ஆஜரானபோது, அவரை தனது அறைக்கு அழைத்து ரகுவன்ஷி இந்த பேரத்தை நடத்தியுள்ளாா்.
இதில் முதல் தவணையாக ரூ.20 லட்சம் தர ரதிகாந்த் ஒப்புக் கொண்டாா்.
இது தொடா்பாக சிபிஐ-க்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. லஞ்சம் வாங்கியபோது ரகுவன்ஷியை சுற்றி வளைத்த சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.
ரகுவன்ஷி 2013-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியாவாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.