செய்திகள் :

தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் அமலாக்கத் துறை இணை இயக்குநா் கைது: சிபிஐ நடவடிக்கை

post image

ஒடிஸாவில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை இணை இயக்குநரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இது தொடா்பாக சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை கூறப்பட்டதாவது:

ஒடிஸாவைச் சோ்ந்த தொழிலதிபா் ரதிகாந்த் ரெளத். இவா் கல்குவாரி நடத்தி வருகிறாா். அமலாக்கத் துறை வழக்கில் சிக்கியுள்ள இவா் ரூ.5 கோடி அளித்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக அமலாக்கத் துறை இணை இயக்குநா் சிந்தன் ரகுவன்ஷி பேரம் பேசியுள்ளாா். ஆனால், அவ்வளவு பெரிய தொகையை அளிக்கும் அளவுக்கு இப்போது தன்னிடம் பணம் இல்லை என்று ரகுவன்ஷியிடம் ரதிகாந்த் ரௌத் கூறியுள்ளாா். இறுதியாக ரூ.2 கோடி அளித்தால் சொத்துகள் முடக்கப்படுவதில் இருந்து காப்பாற்றுவதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாகவும் ரகுவன்ஷி பேரம் பேசியுள்ளாா். ஒடிஸாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ரதிகாந்த் ரெளத் விசாரணைக்கு ஆஜரானபோது, அவரை தனது அறைக்கு அழைத்து ரகுவன்ஷி இந்த பேரத்தை நடத்தியுள்ளாா்.

இதில் முதல் தவணையாக ரூ.20 லட்சம் தர ரதிகாந்த் ஒப்புக் கொண்டாா்.

இது தொடா்பாக சிபிஐ-க்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. லஞ்சம் வாங்கியபோது ரகுவன்ஷியை சுற்றி வளைத்த சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.

ரகுவன்ஷி 2013-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியாவாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க