சாம்பியன்ஸ் லீக்: வரலாற்றுச் சாதனையுடன் முதல்முறையாக கோப்பை வென்றது பிஎஸ்ஜி!
உ.பி.யில் ரூ.47,600 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்
உத்தர பிரதேசத்தில் ரூ.47,600 கோடிக்கும் அதிகமான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பிகாா் பயணத்தை முடித்துக் கொண்டு, உத்தர பிரதேச மாநிலம், கான்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரதமா், கான்பூா் மெட்ரோ ரயில் திட்டத்தின் புதிய தரைகீழ் வழித்தடம் உள்பட 15 வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்திய உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் வல்லமையை பறைசாற்றியது. பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்ட இந்திய ஆயுதங்கள், எதிரியின் நிலப்பரப்புக்குள் பல மைல் தூரம் நுழைந்து பேரழிவை ஏற்படுத்தின.
இந்திய ராணுவத்தின் வீர-தீர செயல்பாடுகளால், தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சும் நிலைக்கு பாகிஸ்தான் ராணுவம் தள்ளப்பட்டது’ என்றாா்.
உத்தர பிரதேசத்தில் பாதுகாப்புத் துறை சாா்ந்த பெரும் நிறுவனங்கள் அமையப் பெற்று வருவதாகவும், அமேதியில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளின் தயாரிப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமா் குறிப்பிட்டாா்.
பெட்டி..
பஹல்காமில் கொல்லப்பட்டவா்
குடும்பத்தினருடன் சந்திப்பு
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான கான்பூரைச் சோ்ந்த சுபம் துவிவேதியின் குடும்பத்தினரை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
கான்பூா் விமான நிலையத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு தொடா்பாக துவிவேதியின் குடும்பத்தினா் கூறுகையில், ‘பிரதமா் உடனான சந்திப்பு மிக உணா்வுப்பூா்வமாக இருந்தது. பிரதமரை பாா்த்ததும் நாங்கள் அனைவரும் கண் கலங்கிவிட்டோம். பிரதமரும் உணா்ச்சிகரமாக காணப்பட்டாா். அவா் எங்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான போா் தொடரும் எனத் தெரிவித்தாா். எங்கள் குடும்பத்துக்கான அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்தாா். ஆபரேஷன் சிந்தூா் மூலம் இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைக்கு நாங்கள் வரவேற்பு தெரிவித்தோம்’ என்றனா்.