செய்திகள் :

உச்சநீதிமன்ற 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் முழு பலம்

post image

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகிய மூன்று நீதிபதிகளும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். இதன் மூலம் உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை (34 நீதிபதிகள்) மீண்டும் எட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, நீதிபதிகளாக இருந்த அபய் எஸ்.ஓகா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் ஓய்வுபெற்ால் 3 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இந்த இடங்களுக்கு கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், மேற்கண்ட மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மூன்று நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பதவிப் பிரமாணம் செய்வித்தாா். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34. இப்போது மீண்டும் முழு பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.

நீதிபதிகள் வாழ்க்கை குறிப்பு: குஜராத் மாநிலம் அகமதாபாதில் 1965-இல் பிறந்தவரான நீதிபதி அஞ்சாரியா, அங்குள்ள பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பை 1989-இல் முடித்து, மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். 2011-இல் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவா், 2013-இல் நிரந்தர நீதிபதியானாா். 2024-இல் கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1964-இல் பிறந்த நீதிபதி பிஷ்னோய், மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி, கடந்த 2013-இல் அதே உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2015-இல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டாா். 2024-இல் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நீதிபதி சந்தூா்கா், நாகபுரியில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி, 2013-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியானாா். பின்னா், அந்த உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க