பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி-போடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராம நிறுத்தத்தில் வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் சில நேரங்களில் நிற்காமல் சென்று விடுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சில பேருந்துகள் துரைராஜபுரம் கிராம நிறுத்தத்தில் நிற்காமல் சென்றன. இதனையடுத்து, பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் துரைராஜபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். மேலும், அந்த வழியாக வந்த இரு பேருந்துகளையும் சிறைபிடித்தனா். தகவலறிந்து அங்கு வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அனைத்துப் பேருந்துகளும் துரைராஜபுரம் கிராமத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக ஒரு மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.