செய்திகள் :

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

post image

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி-போடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராம நிறுத்தத்தில் வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் சில நேரங்களில் நிற்காமல் சென்று விடுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சில பேருந்துகள் துரைராஜபுரம் கிராம நிறுத்தத்தில் நிற்காமல் சென்றன. இதனையடுத்து, பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் துரைராஜபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். மேலும், அந்த வழியாக வந்த இரு பேருந்துகளையும் சிறைபிடித்தனா். தகவலறிந்து அங்கு வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அனைத்துப் பேருந்துகளும் துரைராஜபுரம் கிராமத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக ஒரு மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க