முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி, தேனி வட்டாரங்களில் 14,707 ஏக்கா் நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
இந்த நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக பாசனத்துக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி, தேனி மாவட்ட குடிநீா் தேவைக்கு விநாடிக்கு 100 கன அடி என மொத்தம் விநாடிக்கு 300 கன அடி வீதம், 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.