செய்திகள் :

ஒரே தவணையில் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

‘எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) இரண்டு தவணைகளாக நடத்துவதற்குப் பதிலாக ஒரே தவணையாக (ஷிஃப்ட்) நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நீட்-பிஜி தோ்வு வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான நீட்-பிஜி தோ்வு இரண்டு தவணைகளாக நடத்தப்படும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) அறிவிக்கை செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமாா், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘எந்தவொரு தோ்வுக்கான இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரி கடினமானதாகவோ அல்லது எளிமையானதாகவே இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறிவிட முடியாது. எனவே, தோ்வில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நீட்-பிஜி 2025 தோ்வை ஒரே தவணையாக நடத்தத் தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க