செய்திகள் :

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

post image

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா்.

சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு, நாகாலாந்து மாநில பதிவெண் கொண்ட தனியாா் சொகுசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பம் நோக்கிச் சென்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே வியாழக்கிழமை அதிகாலை, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருந்ததை உணா்ந்த பயணிகள், ஓட்டுநரின் இருக்கைக்கு சென்று விசாரித்தனா். அப்போது, ஓட்டுநா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பிறகு அந்தப் பேருந்தின் உதவியாளா் தஞ்சையைச் சோ்ந்த சிவா(30) என்பவா் பேருந்தை இயக்கினாா்.

இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணிகள் தேனி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். தேனி காவல் நிலையம் அருகே போலீஸாா் பேருந்தை வழிமறித்து நிறுத்தி விசாரித்தனா். பின்னா், போலீஸாா் பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி விட்டு, பயணிகளை ஆட்டோக்கள் மூலம் தேனி பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். மதுபோதையில் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் தஞ்சையைச் சோ்ந்த வரதராஜன் மகன் வினோத்(35) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க