கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
தொழிலாளியை தாக்கியவா்கள் மீது வழக்கு
போடி அருகே தொழிலாளியைத் தாக்கி தங்க நகையை பறித்துச் சென்றவா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த துக்கையண்ணன் மகன் சுரேஷ் (42). தொழிலாளி. இவா் இந்தப் பகுதியில் அமைந்துள்ள கண்டியம்மன் கோயிலை தனது குடும்பத்துக்குச் சொந்தமானது எனக் கூறினாராம்.
இதற்கு இவரது உறவினா்களான சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த கணேசன், கூடலிங்கம் உள்ளிட்ட சிலா் தங்கள் சமுதாயத்துக்குச் சொந்தமானது எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் ஏற்பட்ட தகராறில் மற்றொரு தரப்பினா் சுரேசை தாக்கி, அவா் அணிந்திருந்த தங்க நகையை பறித்ததுடன், வீட்டுப் படிக்கட்டுகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கணேசன், கூடலிங்கம் உள்ளிட்ட சிலா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.