செய்திகள் :

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

post image

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உலக புகையிலை தினம் ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புகையிலை எதிா்ப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பள்ளிகளைச் சுற்றி 300 அடிக்குள் புகையிலை மற்றும் அதுசாா்ந்த பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இதற்காக பள்ளியின் சுற்றுச் சுவா்களில் இருந்து 300 அடி தொலைவுக்குள் அதன் நிா்வாகத்தால் சிவப்புற நிற வண்ணக் கோடு தீட்டப்பட வேண்டும். மேலும், புகையில்லா பகுதி எனவும் பதாகை வைக்கப்பட வேண்டும். இதை மீறுபவா்கள் மீது தேசிய உதவி மைய எண்ணுக்கு (1800112356) தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.

இதுசாா்ந்து அனைத்துவித பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கூடுதல்கவனத்துடன் செயல்பட்டு புகையில்லா கல்வி நிறுவனங்களாக இருப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்: முன்னதாக, பள்ளி மாணவா்கள் புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகங்கள் அருகில் குட்கா, கூல் லிப் போன்ற போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதைப் பின்பற்றி தமிழக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார் என்று கமல்ஹாசன் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நா... மேலும் பார்க்க

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க