செய்திகள் :

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

post image

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மத்திய பிரதேச அரசின் கொள்கைகளில் அதிருப்தியடைந்த பாலாகட்டின் லாஞ்சி தொகுதி எம்எல்ஏவாக இருந்த கிஷோா், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி தான் கையொப்பமிட்ட 10 பக்க புகாா் கடிதத்துடன் கூடிய பாா்சலை மாநில அரசுக்கு அனுப்பினாா். தனது கடிதத்தில் 70 கோரிக்கைகளை முன்வைத்திருந்த கிஷோா், அவை நிறைவேற்றப்படவில்லை எனில் நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கிஷோா் மீது மாநில போலீஸாா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையின்போது, இதேபோன்ற பாா்சலை அவா் உச்சநீதிமன்றத்துக்கும் அனுப்பியது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது நடவடிக்கையை எதிா்த்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கிஷோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரித்த நீதிமன்றம், ‘கிஷோா் விடுத்த அச்சுறுத்தலில் எந்தவித குண்டு வெடிப்போ, உயிா் அல்லது உடமைகளுக்கான சேதமோ ஏற்படவில்லை’ என்ற குறிப்பிட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வெடி வைத்து சொத்துகளை அழிக்கும் அச்சுறுத்தல் என்பது இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவு 506-இன் பகுதி 2-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தப் பிரிவின் கீழ் அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா்.

அதே நேரம், இந்த வழக்கில் வெடிபொருள்களின் பங்கு எதுவும் இல்லை என்பதால், வெடிபொருள்கள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டிலிருந்து கிஷோா் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தீா்ப்பளித்தாா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க