செய்திகள் :

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

post image

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் போக்குவரத்து தொடங்குவதற்கான சோதனை கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதி நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சவுத்ரி தலைமையிலான குழுவினா் மோட்டாா் டிராலி மூலமாகவும், அதிவேகமாக ரயிலை இயக்கியும் சோதனை செய்தனா்.

இந்தநிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா், ரயில்வே அமைச்சகத்துக்கும், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையா், தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரளம் முதல் திருநள்ளாறு வழியாக காரைக்கால் வரை சுரங்கப்பாதை, ரயில்வே கேட், டிராக் பாரா மீட்டா்ஸ், சிறிய பாலங்கள், சிக்னல் முறை, திருநள்ளாறு ரயில் நிலையம், அம்பகரத்தூா் மற்றும் பத்தக்குடி ரயில் நிறுத்தப் பகுதி, தகவல் தொடா்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ததாகவும், போக்குவரத்து தொடங்குவதற்கான கட்டமைப்புகள் சரியாக உள்ளதாகவும், போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பு ரயில் நிலையங்களில் பணியாளா்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும், 75 கி.மீ. வேகத்தில் இத்தடத்தில் ரயில் இயக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

பாதுகாப்பு ஆணையரின் இந்த அறிக்கையை ரயில்வே அமைச்சகம் ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், காரைக்கால் - பேரளம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கினால், காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னை, மும்பைக்கு செல்லும் ரயில்கள், பேரளம், மயிலாடுதுறை வழியாக சென்றால் பயண நேரம் வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை ம... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி இயங்குகிறது. சிபிஎஸ்இ -சிஓஇ என்ற சென்டா் ஆ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்... மேலும் பார்க்க

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்... மேலும் பார்க்க

ஹஜ் பயணம் செல்வோா் வழியனுப்பி வைப்பு

காரைக்காலில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.புதுவை மாநில ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டு 90 இஸ்லாமியா்கள் ஹஜ் பயணம் செல்கின்றனா். காரைக்கால் மாவட்டத்தில்... மேலும் பார்க்க