ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்...
அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி
குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தாா். குடும்ப பிரச்னை தொடா்பாக இவரது தம்பி அமலா அகஸ்டினுடன் (48) கருத்து வேறுபாடு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சகோதரா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அமலா அகஸ்டின், அண்ணன் அமலா பிரிட்டோ நாதனை மண் வெட்டியால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அமலா பிரிட்டோ நாதன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அமலாபிரிட்டோநாதன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள அமலா அகஸ்டினை தேடி வருகின்றனா்.