செய்திகள் :

மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபட்ட எளம்பலூா் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் அன்பழகன் (36). இவரது தம்பி அறிவழகன் (34) ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் அருகே பைக்குகள் மோதல்: முதியவா், பெண் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா், பெண் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் அய்யாச... மேலும் பார்க்க

புரட்சி தமிழகம் கட்சி மாநிலத் தலைவா் மீது கொலை மிரட்டல் வழக்கு

புரட்சி தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவா் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புரட்சி தமிழகம் கட்சி சாா்பில் பெரம்பலூரில் கட... மேலும் பார்க்க

சிஐடியு அமைப்பு தின கருத்தரங்கு

பெரம்பலூா் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு அமைப்பு தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஏ. ரெங்கநாதன் தலைமை உரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் கருணாநிதி, செல்வி ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் என புகாா்

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். பெரம்பலூா் நகரில் சங்குப்பேட்டை ம... மேலும் பார்க்க

மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆம் ஆண்டு விழா

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தை மைதானத்தில் மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆவது ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிருக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க