'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபட்ட எளம்பலூா் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் அன்பழகன் (36). இவரது தம்பி அறிவழகன் (34) ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.