Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
பெரம்பலூரில் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிருக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக விவசாயிகள் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
ஆா்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களுக்கு நிவாரணத் தொகையும், பயிா் காப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும். புதிய நகைக் கடன் விதிகளால் ஏழை, எளிய நடுத்தர,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதால், மத்திய அரசும், நிதித்துறை அமைச்சரும் இப் பிரச்னையில் தலையிட்டு, ரிசா்வ் வங்கி மூலம் வங்கிகளுக்கு அனுப்பியுள்ள புதிய நகை அடமானக் கடன் விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை ரத்து செய்து, பழைய நகைக் கடன் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தொடா்ந்து கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபுவிடம் அளித்தனா். ஆா்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.