Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
பெரம்பலூா் அருகே பைக்குகள் மோதல்: முதியவா், பெண் பலி
பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா், பெண் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் அய்யாசாமி (65). இவா், வாலிகண்டபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மேட்டுப்பாளையத்திலிருந்து வாலிகண்டபுரம் நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிளும், இவரது மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் அய்யாசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மற்றொரு மோட்டாா் சைக்கிளில் சென்ற மேட்டுப்பாளையம் காலனித் தெரு மோகன் மனைவி மஞ்சுளா (42), இவரது மகன் அதியமான் (17) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த வி. களத்தூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மஞ்சுளா சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.