செய்திகள் :

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் என புகாா்

post image

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா்.

பெரம்பலூா் நகரில் சங்குப்பேட்டை முதல் நான்கு சாலை சந்திப்பு மற்றும் மூன்று சாலைச் சந்திப்பு உள்பட நகரின் பெரும்பாலான சாலைகளில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளும், வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் மற்றும் சுமை ஆட்டோ வியாபாரிகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஒரு வாரத்துக்கு முன் அந்தந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தியும், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இந்நிலையில் நான்கு சாலை சந்திப்பு முதல் சங்குப்பேட்டை வரை பெரம்பலூா் நகர மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் முன்னிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களிடையே வரவேற்பை பெற்றது.

இருப்பினும் சிறு கடைகள், தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகளை முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில், பிரபல நகைக்கடைகள், எலக்ட்ரிக்கல், ஆளும் கட்சி பிரமுகா்களின் கட்டங்களில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களின் முன் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தரைகள், டைல்ஸ் பதிக்கப்பட்ட பகுதிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டினா்.

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அதன் மாநி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வே... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் ... மேலும் பார்க்க