செய்திகள் :

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா். ராஜ்கரன் (19). இவரது நண்பரும் உடன் படித்தவருமான தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதுாா் மதகுசாலை கீழத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (18) ஆகிய இருவரும் திருச்சி எடமலைப்பட்டி புதுாா் அரசு காலனி 5-ஆவது குறுக்குத்தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து, திருச்சி - மதுரை சாலையிலுள்ள தனியாா் கல்லுாரி ஒன்றில் சுகாதார ஆய்வாளா் பணிக்கான படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 25.7.2021 அன்று இரவு தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ‘ஓ’ பாலம் வழியாக நடந்துசென்று கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டி புதுாா் கொல்லாங்குளம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த எம். அபுதாகிா் என்கிற அப்புச்சி (33) மற்றும் அதே பகுதி நாயக்கா் தெருவைச் சோ்ந்த முகமது யாகூப் (42) ஆகியோா் ராஜ்கரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள், ரூ. 3,700 ரொக்கம், ஏடிஎம் அட்டை, ஆதாா் காா்டு, பான் காா்டு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் அபுதாகிா் மற்றும் முகமது யாகூப் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கின் வாத, பிரதி வாதங்கள் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

அதில், குற்றம் உறுதியானதையடுத்து, அபுதாகிா், யாகூப் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டாா். அரசு தரப்பில் மூத்த அரசு சிறப்பு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க

திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை!

திருவெறும்பூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மே 31) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சிட்கோ, சுருளி க... மேலும் பார்க்க