செய்திகள் :

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விவேகானந்தன் மகன் அன்புமணி (24). இவா், திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை சண்டிவீரப்பன் கோயில் சந்து பகுதியில் தங்கியிருந்து திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.

படிப்பு முடிந்தவுடன் அன்புமணியை வேலைக்குச் செல்லுமாறு பெற்றோா் கூறியுள்ளனா். ஆனால் அவா் மேல்படிப்பு படிப்பதாகக் கூறியுள்ளாா். இதனால் பெற்றோருக்கும், அவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக அவா் மன அழுத்தத்தில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், அவா் தங்கியிருந்த வீட்டில், அன்புமணி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸ் உதவி ஆய்வாளா் மாதவன் தலைமையிலான போலீஸாா் உடலைக் கைப்பற்றி மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க

திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை!

திருவெறும்பூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மே 31) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சிட்கோ, சுருளி க... மேலும் பார்க்க