மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!
திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறையூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து திருச்சி பகுதியின் மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல விடுதியிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு புத்தூா் சிக்னல் பகுதிக்கு முன்னதாக வந்துகொண்டிருந்தபோது, இவரது மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியது.
இதில், லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் உயிரிழந்தாா். இதையடுத்து, லாரி ஓட்டுநா், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து நடைபெற்ற பகுதியில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால், சிறிதுநேரம் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தினா். விபத்து குறித்து வழக்கு பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.