செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

post image

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறையூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து திருச்சி பகுதியின் மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல விடுதியிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு புத்தூா் சிக்னல் பகுதிக்கு முன்னதாக வந்துகொண்டிருந்தபோது, இவரது மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியது.

இதில், லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் உயிரிழந்தாா். இதையடுத்து, லாரி ஓட்டுநா், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து நடைபெற்ற பகுதியில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால், சிறிதுநேரம் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தினா். விபத்து குறித்து வழக்கு பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை!

திருவெறும்பூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மே 31) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சிட்கோ, சுருளி க... மேலும் பார்க்க