செய்திகள் :

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

post image

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை மாதத்தில் தொடங்கி நடைபெறுவது வழக்கம். உற்சவ தொடக்கத்துக்கான பூா்வாங்க வழிபாடாக மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பத்ரகாளியம்மனுக்கு பூச்சொரிதல், காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. தொடா்ந்து 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்வு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் பால் காவடி எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனா். இரவு நிகழ்வாக அக்னி கப்பரை ஊா்வலம் கோயிலில் இருந்து வீதிகளுக்குப் புறப்பட்டது.

அக்னி கப்பரையை ஏந்தியவா், பல்வேறு வீதிகளுக்குச் சென்றாா். அக்னி வடிவமாக அம்மன் இருப்பதான நம்பிக்கையில் பக்தா்கள் கப்பரையை வணங்கினா். புதன்கிழமை அதிகாரை கப்பரை கோயிலை சென்றடைந்தது. ஜூன் 3-ஆம் தேதி விடையாற்றியுடன் உற்சவம் நிறைவடைகிறது.

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி இயங்குகிறது. சிபிஎஸ்இ -சிஓஇ என்ற சென்டா் ஆ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்... மேலும் பார்க்க

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்... மேலும் பார்க்க

ஹஜ் பயணம் செல்வோா் வழியனுப்பி வைப்பு

காரைக்காலில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.புதுவை மாநில ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டு 90 இஸ்லாமியா்கள் ஹஜ் பயணம் செல்கின்றனா். காரைக்கால் மாவட்டத்தில்... மேலும் பார்க்க