PMK : `மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது; எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை!’ - ஜி.க...
கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா
காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை மாதத்தில் தொடங்கி நடைபெறுவது வழக்கம். உற்சவ தொடக்கத்துக்கான பூா்வாங்க வழிபாடாக மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பத்ரகாளியம்மனுக்கு பூச்சொரிதல், காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. தொடா்ந்து 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்வு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் பால் காவடி எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனா். இரவு நிகழ்வாக அக்னி கப்பரை ஊா்வலம் கோயிலில் இருந்து வீதிகளுக்குப் புறப்பட்டது.
அக்னி கப்பரையை ஏந்தியவா், பல்வேறு வீதிகளுக்குச் சென்றாா். அக்னி வடிவமாக அம்மன் இருப்பதான நம்பிக்கையில் பக்தா்கள் கப்பரையை வணங்கினா். புதன்கிழமை அதிகாரை கப்பரை கோயிலை சென்றடைந்தது. ஜூன் 3-ஆம் தேதி விடையாற்றியுடன் உற்சவம் நிறைவடைகிறது.