செய்திகள் :

"ரூ.2 லட்சத்திற்குக் கீழ் உள்ள தங்க நகைக் கடனுக்கு புது ரூல்ஸ் கூடாது" - மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

சமீபத்தில், தங்க நகைக் கடனுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் வரைவுகளின் சில தளர்வுகளைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடனுக்கான வரைவுகளை வெளியிட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த விதிமுறைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின் படி, நிதி சேவைகள் துறை ஆய்வு செய்தது.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி வரைவுகளில் கூறப்பட்டுள்ள மாற்றங்களால் சிறு தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நகைக் கடன் விதிமுறைகள் 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தான் அமலுக்கு வர வேண்டும். அப்போது தான் இதை அமல்படுத்தப் போதுமான கால அவகாசம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, ரூ.2 லட்சத்திற்குக் கீழ் தங்க நகைக் கடன் வாங்குபவர்களுக்கு இந்த விதிமுறைகள் விதிக்கப்படக்கூடாது. அப்போது தான் அவர்களால் எளிதாகவும், விரைவாகவும் தங்க நகைக் கடன் வாங்க முடியும் என்று நிதி சேவைகள் துறை கூறியுள்ளது.

மேலும், இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி மக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறது.

நிதி சேவைத் துறையின் அனைத்து பரிந்துரைகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டிருக்கிறது.

தங்க நகைக் கடன் : ரூ.50,000 தங்கத்தை அடகு வைத்தால் ரூ.35,500 கடன் - RBI புது ரூல்ஸ் | Explained

இந்திய வீடுகளில், அதுவும் நடுத்தர வீடுகளில், தங்க நகைகளை ஆசைக்கு வாங்குவதை விட, அவசரத் தேவைகளுக்கு அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்று வாங்குவது தான் அதிகம். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றைத்... மேலும் பார்க்க

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்' - தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

தங்க நகை அடமானக் கடன் குறித்து மாதா மாதம் எதாவது அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி (RBI). கடந்த மாதம், அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் ப... மேலும் பார்க்க

ரூ.1303 கோடி என்ற நிகர இலாபத்தை ஈட்டி மீண்டும் வரலாறு படைக்கும் சௌத் இந்தியன் வங்கி!

சௌத் இந்தியன் வங்கி, நிதியாண்டு 24-25 ல் ரூ.1302.88 கோடி என்ற நிகர இலாபத்தை அறிவித்திருக்கிறது. நிதியாண்டு 23-24-ல் ரூ.1070.08 கோடி இலாபத்துடன் ஒப்பிடுகையில், 21.75 சதவிகித வளர்ச்சியை இவ்வங்கி பதிவு ச... மேலும் பார்க்க

ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் கட்டணம் உயர்வு! - எவ்வளவு தெரியுமா?

ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கு ஆகும் கட்டண விதிமுறைகளை மாற்றி அறிவித்திருந்தது இந்திய ரிசர்வ் வங்கி. அவை இன்று முதல் (மே 1) அமலுக்கு வர இருக்கிறது. என்ன மாற்றம்? வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திர... மேலும் பார்க்க