செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!

post image

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு பதிவுக்காக இன்ஸ்டா பெண் பிரபலம் கைது கொல்கத்தா காவல்துறையினால் செய்யப்பட்டுள்ளார்.

புணேவில் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஷர்மிஸ்தா பனோலி (22) , இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வகுப்புவாத சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இந்தப்பெண் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில் பாலிவுட் நடிகர்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மௌனமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த விடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பவே அதை நீக்கியும் இருக்கிறார். பின்னர், பலரும் இவரை கடுமையாக கிண்டல் செய்துள்ளனர். கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவதுக்குப் பிறகு ஷர்மிஷ்தா பனோலி, “யாரையும் காயப்படுத்தும் எண்ணத்துடன் நான் இதைக் கூறவில்லை. யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல், எனது பதிவுகளில் கவனமாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

பிரச்னை முடிந்துவிட்டதென இருந்த நிலையில், ஏற்கனவே அவர்மீது கொல்கத்தா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நோட்டீஸை காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுப்ப முயற்சித்துள்ளார்கள். ஆனால், அவர் அந்தக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதாக பெயர் குறிப்பிடாத காவல்துறையினர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னர், நீதிமன்ற உத்தவிரவின்படி ஷர்மிஸ்தா பனோலியை கொல்கத்தா காவல்துறையினர் வெள்ளிக் கிழமை (மே.30) குருகிராமில் வைத்து கைது செய்தனர்.

பஹல்காமில் ஏப்.22இல் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மே.7ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷ் சிந்தூர் மூலமாக பதிலடி கொடுத்தது.

பின்னர், அமெரிக்காவின் தலையீட்டால் இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்.

4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்புகள்! கர்நாடகத்தில் இருவர் பலி!

கர்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றால் இருவர் பரிதாபமாக பலியாகினர்.மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,700-ஐத் தாண்டியுள்ளது. ... மேலும் பார்க்க

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க