செய்திகள் :

இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

post image

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இளம் இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்: ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சாதிக்குமா?

தங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியால் சிறப்பான சாதனையை படைக்க முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவிலான திறமைவாய்ந்த வீரர்கள் இருப்பதற்கு, ஐபிஎல் தொடர் மிக முக்கியக் காரணமாக உள்ளது. ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. இந்த ஆண்டு சூர்யவன்ஷி உள்பட பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதை நாம் பார்த்தோம். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் இளம் வீரர்கள் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் கடினமானதாக இருக்கப் போகிறது. ஆனால், இந்திய அணியில் உள்ள வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால், அவர்களால் ஏதேனும் சிறப்பான சாதனை படைக்க முடியும் என்றார்.

2-வது ஒருநாள்: சதம் விளாசிய கீஸி கார்ட்டி; இங்கிலாந்துக்கு 309 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி. வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற... மேலும் பார்க்க

ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி.க்கும் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இளம் வீரர் ரிங்கு சிங் உருவெடுத்து வருகிறார். ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்; இந்தியா ஏ 557 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (மே 31) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கைவிரல் முறிவு; மே.இ.தீவுகள் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!

கைவிரல் முறிவு காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் விலகியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க