செய்திகள் :

இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்

post image

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன் தெரிவித்ததாவது, இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய அரசுக்கும் மக்களுக்கும் தனது அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்திய முதல் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்றாகும்.

பயங்கரவாதம் எங்கு நிகழ்த்தப்பட்டாலும், அதற்கு எதிராக டென்மார்க் இருப்பதை இந்திய அரசுக்கு நாங்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளோம். ஐ.நா. அவையிலும் இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளோம். இந்தியாவுடன் மிகவும் வலுவான நட்புறவை டென்மார்க் கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இருவரும் சேர்ந்து பசுமை கூட்டாண்மையை நிறுவினோம். தொழில்நுட்பத் துறையில், டென்மார்க் வழங்கும் பரந்த திறன்களையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம்.

பசுமை மாற்றம், எரிசக்தி, நீர், விவசாயம் மற்றும் அதனை எவ்வாறு நிலையானதாக மாற்றுவது என்பதில் எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது, இந்தியா, ஏற்கெனவே அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கூறினார்.

சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்

பாகிஸ்தானுக்கு தெரிவித்த இரங்கல் அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக,... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு பதிவுக்காக இன்ஸ்டா பெண் பிரபலம் கைது கொல்கத்தா காவல்துறையினால் செய்யப்பட்டுள்ளார். புணேவில் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஷர்மிஸ்தா பனோலி (22) , இன்ஸ்டாகிராமில் பி... மேலும் பார்க்க

21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் கார் பார்க்கிங் லிஃப்ட் இடிந்ததில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மும்பையில் 21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் கார் பார்க்கிங் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் உள்ள 21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ... மேலும் பார்க்க

மிசோரமில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடுகள், ஹோட்டல்!

மிசோரமில் கனமழையின்போது வீடுகள், ஹோட்டல் இடிந்து விழுந்ததில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ந... மேலும் பார்க்க

நிலச்சரிவு: அருணாசலத்தில் 7 பேர் பலி

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஏழு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்று... மேலும் பார்க்க

இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! ராணுவத் தலைமை தளபதி ஒப்புதல்

பாகிஸ்தான் மீதான போரில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டது.பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந... மேலும் பார்க்க