இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!
மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்
பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்கு, குடிநீா் விநியோகத்தில் சிரமத்தை சந்திக்கின்றனா். தொகுதி பேரவை உறுப்பினா் மற்றும் மாவட்ட ஆட்சியா் நடத்திய குறைதீா் கூட்டங்களில் கிராமத்தினா் இப்பிரச்னையை தெரிவித்தனா்.
இந்தநிலையில், நபாா்டு நிதியகத்தின் உதவியில் ரூ. 4.50 கோடியை இத்திட்டத்துக்காக அரசு ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியை தொடங்கிவைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பட்டினச்சேரி கிராமப் பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.