செய்திகள் :

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

post image

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.

இதில் ஒரு குடும்பத்தில் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீட்டைப் பெறலாம்.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

யார் உதவி பெறலாம்?

70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள இந்திய குடிமக்கள் இந்தத் திட்டம் மூலம் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தில் பயன்பெறுவோரின் பொருளாதார நிலை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

என்ன செய்ய வேண்டும்?

ஆயுஷ்மான் வயோ வந்தனா திட்டத்தில் காப்பீட்டு அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை வைத்து மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையைப் பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான e-KYC செய்ய வேண்டும்.

சிறப்பம்சம் என்ன?

ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தில் உள்ளவர்கள் இதை இரட்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனியார் காப்பீடு அல்லது பிற அரசு சுகாதாரத் திட்டங்களில் உள்ளவர்கள்கூட இதற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். ஆனால், எந்தத் திட்டத்தின் மூலம் அவர்கள் பயன்பெற விரும்புகிறார்களோ அந்த ஒரு திட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற காத்திருப்பு காலம் கிடையாது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சுகாதாரக் காப்பீடு கிடைக்கும்.

27 சிறப்புப் பிரிவுகளில் 1,961 மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது இது.

13,352 தனியார் மருத்துவமனைகள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெறலாம்.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்?

ஹீமோடையாலிசிஸ் / பெரிட்டோனியல் டயாலிசிஸ்

முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்

PTCA மற்றும் இதயமுடுக்கி கருவி பொருத்துதல் உள்ளிட்ட இருதயவியல் சிகிச்சைகள்

பக்கவாதம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு

எலும்பியல் அறுவை சிகிச்சைகள்

உள்ளிட்ட பல நோய்கள் இதில் அடங்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோரில் ஆயுஷ்மான் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். Log in செய்து ஆதார் மற்றும் மாநிலத் தகவல்களை உள்ளிடவும். பின்னர், அதில் கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும். கடைசியாக, e-KYC சரிபார்ப்பு முடிந்தவுடன் ஆயுஷ்மான் வயோ வந்தனா அட்டையைப் பெறலாம்.

சீனா: "இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்..." - சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?

நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம். இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கட... மேலும் பார்க்க

"வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி' வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ... மேலும் பார்க்க

"நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்..." - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. "ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கி... மேலும் பார்க்க

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்க... மேலும் பார்க்க