செய்திகள் :

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சகேரி விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மிகவும் உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக இருந்தது என்று சுபமின் உறவினர் சௌரப் திவேதி தெரிவித்தார். மோடியைச் சந்தித்தபோது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அழத் தொடங்கினர் என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில் திருமணம் செய்துகொண்ட சுபம் திவேதி விடுமுறையையொட்டி பஹல்காம் சென்றபோது பயங்கரவாதத் தாக்குதலில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப். 22 ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

கமல்ஹாசன் விஸ்வரூபம்! தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதைத்தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தானும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் கடந்த வாரம் மே 10 முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது! - கார்கே

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிம... மேலும் பார்க்க

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?

கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்... மேலும் பார்க்க