செய்திகள் :

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

post image

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்த அறிவுறுத்தலைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

அதில், கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி முழுமையாக குணமடைந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் காய்ச்சல், இருமலுடன் பள்ளி வந்தால் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

மேலும் பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தின் நலனுக்காக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மாநிலத்தில் 234 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நகா்ப்புற திட்டங்களுக்கு ரூ.85,000 கோடி ஆசிய வளா்ச்சி வங்கி வழங்குகிறது

இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய வளா்ச்சி வங்கி 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.85,560 கோடி) வழங்கும் என்று அந்த வங்கியின் தலைவா் மசாடோ காண்டா அறிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஆசிய வ... மேலும் பார்க்க

தொடா்ந்து 2-ஆவது மாதமாக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்!

நாட்டில் தொடா்ந்து 2-ஆவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலான நிலையில், மே மாதம் ரூ.2.01 லட்சம் கோட... மேலும் பார்க்க

திரிபுராவில் 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை!

திரிபுரா தலைநகா் அகா்தலாவில் சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதையடுத்து, நகரின் பல பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.முதல்வா் மாணிக் சாஹாவின் வீட்டு முன் முழங்கால் அளவு வ... மேலும் பார்க்க

ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மதாரஸி கேம்ப் இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி தலைவா்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா். எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் தயாரிப்போா் விதிமீறல்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் விதிமீறலில் ஈடுபடுவது தொடா்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது. புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் த... மேலும் பார்க்க

பிரான்ஸ், இத்தாலிக்கு 5 நாள்கள் பயணம் தொடங்கினாா் பியூஷ் கோயல்

பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணத்தை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். இப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டு... மேலும் பார்க்க