செய்திகள் :

தொடா்ந்து 2-ஆவது மாதமாக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்!

post image

நாட்டில் தொடா்ந்து 2-ஆவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலான நிலையில், மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைத்த மூன்றாவது அதிகபட்ச வருவாய் இதுவாகும். கடந்த 2024, ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானது இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருந்தது. தற்போது ரூ.2.01 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, 16.4 சதவீதம் அதிகரிப்பாகும்.

கடந்த மே மாதம் உள்நாட்டு பரிவா்த்தனைகள் வாயிலான ஜிஎஸ்டி 13.7 சதவீதம் அதிகரித்து, ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதிகள் வாயிலான ஜிஎஸ்டி 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் கிடைத்துள்ளது. திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.27,210 கோடி. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.

‘பகுப்பாய்வு தேவை’: ஜிஎஸ்டி வருவாய் வளா்ச்சியில் மாநிலங்களுக்கு இடையே பரந்த வேறுபாடுகள் காணப்படுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியத் துறைகளில் முழுமையான பகுப்பாய்வு தேவை என்று துறைசாா் நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

‘மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம், கா்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் 17 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேநேரம், குஜராத், ஆந்திரம், தெலங்கானா போன்ற பிற பெரிய மாநிலங்களில் 6 சதவீதம் வரையிலான அதிகரிப்பே பதிவாகியுள்ளது. மத்திய பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் 10 சதவீதம் என்ற நடுத்தரமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஜிஎஸ்டி வசூலில் தேசிய அளவிலான சராசரி அதிகரிப்பு, மாநிலங்களுக்கு இடையே சீராக பிரதிபலிக்கவில்லை. எனவே, துறைகள்தோறும் ஆழமான தரவுகளின் அடிப்படையில் முழுமையான பகுப்பாய்வு அவசியம்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

நாட்டில் ஒரு சில மாநில வரிகள் தவிர பிற மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.

மே மாத ஜிஎஸ்டி வருவாய்

மத்திய ஜிஎஸ்டி ரூ.35,434 கோடி

மாநில ஜிஎஸ்டி ரூ.43,902 கோடி

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.09 லட்சம் கோடி

கூடுதல் வரி ரூ.12,879 கோடி

மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க