செய்திகள் :

புகையிலை பொருள்கள் தயாரிப்போா் விதிமீறல்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

post image

புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் விதிமீறலில் ஈடுபடுவது தொடா்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.

புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் விதிமீறலில் ஈடுபடுவது தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது அண்மையில் விசாரணை நடைபெற்றபோது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளின் சில பிரிவுகளை புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் மீறுவதாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

அவ்வாறு மீறப்படும் விதிமுறைகளில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகியவற்றை சேகரித்து வைக்கவும், பேக்கிங் மற்றும் விற்பனை செய்யவும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையும் அடங்கும் என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்த மனு மீதான விசாரணையில் பிரதிவாதியாக மத்திய அரசு சோ்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் மீது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது.

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க