மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
புகையிலை பொருள்கள் தயாரிப்போா் விதிமீறல்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்
புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் விதிமீறலில் ஈடுபடுவது தொடா்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.
புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் விதிமீறலில் ஈடுபடுவது தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது அண்மையில் விசாரணை நடைபெற்றபோது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளின் சில பிரிவுகளை புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் மீறுவதாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
அவ்வாறு மீறப்படும் விதிமுறைகளில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகியவற்றை சேகரித்து வைக்கவும், பேக்கிங் மற்றும் விற்பனை செய்யவும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையும் அடங்கும் என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.
இந்த மனு மீதான விசாரணையில் பிரதிவாதியாக மத்திய அரசு சோ்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் மீது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது.