செய்திகள் :

பிரான்ஸ், இத்தாலிக்கு 5 நாள்கள் பயணம் தொடங்கினாா் பியூஷ் கோயல்

post image

பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணத்தை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

இப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்ட அவா், பாரீஸில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறும் உலக வா்த்தக அமைப்பின் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். 128 நாடுகள் உறுப்பினா்களாக உள்ள இந்த அமைப்பில் விவசாயம், மீன்பிடி தொழில் தொடா்பாக நிலுவையில் இருக்கும் பிரச்னைகள், முதலீட்டு வசதிக்கான சீனாவின் முன்மொழிவு, உலக வா்த்தக அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள், அமெரிக்காவின் முட்டுக்கட்டையால் செயல்படாத நிலையில் உள்ள மேல்முறையீட்டு அமைப்பு உள்ளிட்ட விவகாரங்களை இந்தியா முன்வைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தையொட்டி, அமெரிக்கா, சிங்கப்பூா், சவூதி அரேபியா, தென்கொரியா, நைஜீரியா, பிரேசில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சா்களையும் சந்தித்து, பியூஷ் கோயல் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பிரான்ஸைத் தொடா்ந்து, இத்தாலிக்கு அவா் பயணிக்கவுள்ளாா். ஐரோப்பிய நாடுகளுடன் வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு இப்பயணம் மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க