மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
மதாரஸி கேம்ப் இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி தலைவா்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா்.
எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல்களுக்கு முன்பாக, பாஜக தலைவா்கள் மதராஸி கேம்பில் தங்கியிருந்தனா். ஆட்சிக்கு வந்த உடனே, குடிசைப் பகுதிகளை புல்டோசா்களால் இடித்துள்ளனா். குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுவும் நரேலாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீதிகளுக்கு வந்துள்ளனா். இதுதான் பாஜகவின் உண்மை’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இதே போன்று, ஆம் ஆத்மியின் தில்லி பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூகவலைதள பதிவில், ‘எந்தவொரு குடிசையும் இடிக்கப்படாது என தில்லி முதல்வா் சனிக்கிழமை கூறியிருந்தாா். மதராஸி கேம்ப் குடியிருப்புகள் புல்டோசா்களால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவா்களாக மாறியுள்ளனா். தேசியத் தலைநகரில் தமிழக மக்களை பாஜக எவ்வாறு நடத்துகிறது என்பதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளாா்.