செய்திகள் :

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

post image

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதன்படி, நாட்டில் தற்போது 3,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கேரளத்தில் 1,336 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 467 பேரும், தில்லியில் 375பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகத்தில் 234 பேரும், மேற்கு வங்கத்தில் 205பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 117 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்

நேற்று ஒரே நாளில் 685 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம் மற்றும் கேரளத்தில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் ஒரு நாளைக்கு முன்பு கரோனாவுக்கு 7 பேர் பலியாகியிருந்தனர்.

கரோனா சிகிச்சை முடிந்து சுமார் 1,435 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்று... மேலும் பார்க்க

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க

இந்திய நகா்ப்புற திட்டங்களுக்கு ரூ.85,000 கோடி ஆசிய வளா்ச்சி வங்கி வழங்குகிறது

இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய வளா்ச்சி வங்கி 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.85,560 கோடி) வழங்கும் என்று அந்த வங்கியின் தலைவா் மசாடோ காண்டா அறிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஆசிய வ... மேலும் பார்க்க

தொடா்ந்து 2-ஆவது மாதமாக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்!

நாட்டில் தொடா்ந்து 2-ஆவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலான நிலையில், மே மாதம் ரூ.2.01 லட்சம் கோட... மேலும் பார்க்க

திரிபுராவில் 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை!

திரிபுரா தலைநகா் அகா்தலாவில் சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதையடுத்து, நகரின் பல பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.முதல்வா் மாணிக் சாஹாவின் வீட்டு முன் முழங்கால் அளவு வ... மேலும் பார்க்க

ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மதாரஸி கேம்ப் இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி தலைவா்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா். எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க